கோல்கட்டாவிலுள்ள கர்தா பகுதியில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போனில் வீடியோ கால் மூலம் பேசியவர் ஷாருக்கான். மூதாட்டி ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழியில் உள்ளார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒருமுறை பார்க்க வேண்டும் என உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானி உடன் பேசினார்.

மேலும் ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி ஷிவானியின் மகள் ப்ரியா கூறியதாவது, “எனது தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் கூறினார்.