உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிபாவை விட மிகவும் உயரமான கட்டிடம் தற்போது சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடியும் போது புர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டிடமாக இது இருக்கும்.

தற்போது 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிபா உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டிடமாக உள்ளது. சவுதியின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயர்ந்த கட்டிடம் தற்போது கட்டுமான பணியில் உள்ள நிலையில் இதன் பணிகள் நிறைவடைந்தால் புர்ஜ் கலிஃபாவை விட உயர்ந்த கட்டிடமாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது.