டெல்லி மெட்ரோ நிர்வாகம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் ரா ஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புறப்படும் கடைசி ரயில் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு ஏற்றது போல பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு கொள்ளலாம். மற்ற ரயில்களின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. .