புதுச்சேரியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த குளித்த போது 4 பேர் கடல் அலையால்  இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சாரம் பகுதியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த போது 4 பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்த இரண்டு சிறுமிகள், இரண்டு சிறுவர்கள் என 4 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

கடலில் மூழ்கிய மோகனா 16, லேகா 14, நவீன் 12, கிஷோர் 16 ஆகியோரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் குளித்தபோது 4 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..