குஜராத் மாநிலம் துவாரகா நகரில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் காரான மகேந்திரா பொலிரோ திருடு போயுள்ளது. மோஹித் சர்மா என்ற நபர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரை 6 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து காரை மீட்டு இருந்தாலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் மோஹித் ஷர்மா 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அதோடு காவல்துறையினரின் வாகனத்துடன் செல்பியும் எடுத்து பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.