தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன.

மேலும் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்றும் சாஹு தெரிவித்துள்ளார்