CVIGIL செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிகள் அமலான உடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் எனவும் பண பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.