இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மொபைலில் அடிக்கடி Unknown நம்பரில் இருந்து போன் வந்து பல மோசடிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மொபைல் போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காட்டும் அம்சத்தை பயனர்களுக்கு வழங்குமாறு செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சோதனை முறையில் இந்த திட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ட்ரூகாலர் செயலி இந்த அம்சங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.