அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 50 பேருக்கு நேற்று விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சா சி சிவசங்கர் பேசியபோது 6613 மாணவ மாணவிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் 3.19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாக கூறினார்.

மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர், நகர் மன்ற தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.