சமீப காலமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வெளி வருகிறது. அதன்படி இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கர்கோன் என்ற இடத்தில் மாயாதேவி என்ற பெண் வாழ்ந்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் ஆவார்.

இந்நிலையில் இவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார். அப்போது அங்குள்ள ஒரு மாணவிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தின் போது மாயாதேவிக்கு கிடைத்த சாக்லேட்டை அவர் சாப்பிடும் போது வாயில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தார்.

அதனால் வெளியே எடுத்து பார்த்த போது அதில் செயற்கையாக செய்யப்பட்ட 4 பற்கள் இருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சியானார். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சாக்லேட் எங்கு வாங்கப்பட்டது என்று கண்டுபிடித்து சாக்லேட் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.