பஞ்சாப்பில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டும், மாநிலத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் கேக்கை பரிசோதிக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சிறிதளவு கலக்க வேண்டிய ‘சாக்ரைன்’ என்ற செயற்கை சுவையூட்டியை அதிக அளவில் கேக்கில் கலந்ததே காரணம் என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.