ஜூலியானா மரின்ஸ் (26) என்ற இளம்பெண் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்.  கடந்த 21 ஆம் தேதி ஜூலியானா ஒரு மலையேற்ற குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியா நாட்டில் உள்ள ரஞ்சனி என்ற எரிமலைக்கு மழையேற்றம் சென்றுள்ளார்.

மலையேற்றத்தின் போது ஜூலியானா திடீரென பள்ளத்தில் தவறி விழுந்தார். உடன் சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த நிலையில் ஜூலியான உயிருடன் இருக்கிறாரா என்பதை கண்டறிவதற்காக பள்ளத்திற்குள் ட்ரோன் அனுப்பட்டது. அப்போது ஜூலியானா உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவரை மீட்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மீட்பு படையினரால் ஜூலியானாவை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. நேற்று ஜூலியானா சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.