சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த ஆண் கொலை செய்தார்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உயிரிழந்த பெண் யார் என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது கண்டுபிடித்துள்ளனர். அவர் சென்னை மெரினா பகுதியை சேர்ந்த தேவி(30) என்பதும், விபச்சாரம் செய்யும் பெண் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவரை கொலை செய்த வாலிபர் செய்யாறு மாவட்டத்தை சேர்ந்த குணா(44) என்பதும் தெரியவந்துள்ளது.