பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “எஸ்டிஆர்-48” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

2024ம் வருடம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இத்திரைப்படத்திற்கு பின் சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கக்கூடிய படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளதாகவும், இதை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போதைய தகவலின் படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234-து படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், இந்த படமே சிம்புவுக்கு 50-வது படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தன் 50வது படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு முன்னதாகக் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..