தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு கடந்த வருடம் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படமும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு பாராட்டுகளை வாங்கி கொடுத்தது.

கடந்த வருடத்தில் தொடர்ந்து 2 ஹிட் படங்களை கொடுத்து ஐஸ்வர்யா லட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்களா அல்லது புதிய படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் வரவில்லை. மேலும் அர்ஜுன் தாஸ் அநீதி என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.