நடிகை வினோதினியின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

பிரபல இயக்குனரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா மற்றும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது நடிகை வினோதினியின் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் , தனது வீட்டில் வேலை செய்பவர்களே திருடிவிட்டதாக வேதனையுடன் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வால் பசிக்காக மனிதன் மனிதனை அடித்துக்கொல்லவும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் ஒரு நன்மை இருப்பதாக கூறியுள்ளார்.