பிரபல மூத்த நடிகை சீமா தியோ (81) காலமானார். முதுமை காரணமாக உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார். இதனை அவரது மகன் அபினய் தியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகை  சீமா தியோ இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனந்த், கோரககாஸ் போன்ற பல படங்களின் மூலம் இந்தி சினிமா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.