விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தினமும் விறுவிறுப்பான களத்தை களத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி நடிகர் தீபக் தவறான கருத்துக்களை பதிவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தீபக் கருத்தை ஒளி பரப்பியதால் அந்த தனியார் தொலைக்காட்சி மற்றும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.