பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின் அஞ்சல் வந்திருக்கிறது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பாக சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளியான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு மின்அஞ்சல் வந்தது.

ரோஹித் கார்க் என்பவர் இந்த மின் அஞ்சலை அனுப்பியுள்ளார். இந்நிலையில் கார்க்,கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய் போன்றோர் மீது கொலை மிரட்டல் மின் அஞ்சல்களை அனுப்பியதாக சல்மான் கான் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாந்த்ரா காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 506(2), 120(பி) மற்றும் 34 போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.