சென்னையில் அடுத்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களை ஒட்டி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறீ ட்ரோன்களை பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி வருகை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.