அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய, பிரதமர் மோடியை தேர்வு செய்தது பகவான் ராமர் தான் என பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது என அத்வானி தெரிவித்தார்.