உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனிதமான இரவாக ஒவ்வொரு வருடமும் ஷப் இ மெராஜ் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். நபிகள் நாயகம் மக்காவிலிருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டெல்லியில் பிப்ரவரி 7ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ஷப் இ மெராஜ் பிப்ரவரி எட்டாம் தேதி கடைபிடிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ள நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வியாழக்கிழமை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இந்த நாளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.