ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் தொடர்பான கணிப்புகளை வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி இரவு வரை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 16ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து 27ஆம் தேதி இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.