பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் ரத்த காயங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவடைந்து மருத்துவமனையில் இருந்து வாணி ஜெயராமின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் வாணி ஜெயராம் இறந்தது குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வாணி ஜெயராமின் நெற்றியில் ஒரு அங்குலம் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தூக்கத்தில் புரண்ட போது கீழே விழுந்திருக்கலாம், கட்டிலின் கீழே டீப்பாய் முனையில் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.