பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் 5 பேர் புதிதாக வீட்டிற்குள் வரவுள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

அர்ச்சனா, பாடகர் கானா பாலா, நடிகர் பப்லு, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்ட் என்ட்ரி லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பது நாளை தெரியவரும்.