பெண் செய்தியாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக, நடிகர் சுரேஷ் கோபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கேரளாவில் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் செய்தியாளரின் தோள்மேல் கை வைத்தும், அவரை இழுத்தும் அத்துமீறி நடந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால், பலத்த கண்டனங்கள் எழுந்தது. இதனால், “நான் செய்தது தவறு, என்னை மன்னித்து விடுங்கள்” என தனது x பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.