பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். சினிமா தவிர தொழிலிலும் அவர்கள் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். தொழில் மூலம் அவர்கள் அதிக அளவில் சொத்துகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபிகாவிற்கு ரூ.497 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ரன்வீருக்கு ரூ.360 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இருவரும் மும்பையில் ரன்வீரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோன் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.