விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் டிவியில் 6 மணிக்கு தொடங்கியுள்ள கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது டைட்டில் வின்னர் பட்டத்திற்காக அசீம், விக்ரமன், ஷிவின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த மூன்று பேரில் யார் வெற்றியாளர் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அசீம் வெற்றிவாகை சூடுவார் என்ற பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் அண்மையில் கிடைத்துள்ள தகவலின் படி பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாசுகளை பெற்று அசீம் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஷிவின் அல்லது விக்கிரமன் இவர்களில் யாராவது ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வாகை சூடப்போவது உறுதியாகியுள்ளது.