பாரம்பரிய கைவினை கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாமல் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும். அதன்படி தொடக்கத்தில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

அதனை திருப்பி செலுத்திய உடன் விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெறும் நபர்களுக்கு அரசு கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கடனாக வழங்கும். இந்தியாவின் ராமபுரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.