நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 16வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பி எம் கிசான் திட்ட பயனாளிகள் தங்களுக்கான நிலவரத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

​அதற்கு முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.

அதில் உள்ள Farmers Corner பிரிவுக்கு சென்று Beneficiary Status கிளிக் செய்யவும்.

அதில்  உங்களது பதிவு எண் கொடுத்து உள்ளே செல்லவும்.

இப்போது ‘Get OTP’கிளிக் செய்து ஓடிபி பாஸ்வோர்ட் பெற்றுக்கொள்ளவும்.

ஓடிபி பதிவு செய்தால் உங்களுக்கான பிஎம் கிசான் நிலவரம் தெரிந்துவிடும்.