மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமாக இருப்பவர் சுகந்தா மஜூம்தார். இவர் தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது சோனாகாச்சி போல மாநிலத்தின் சட்ட ஒழுங்கு இருப்பதாக கூறியுள்ளார்.

இதில் சோனாகாச்சி பகுதி என்பது மாநிலத்தின் புகழ்பெற்ற பாலியல் தொழில் நடைபெறும் இடமாகும். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி பெண் மத்திய மந்திரி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் பாலியல் தொழிலாளிகளை இழிவு படுத்திவிட்டதாக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சுகந்தா மஜூம்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவரது கருத்து தற்போது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.