நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கியில் 6160 தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு உள்ளூர் மொழி அவசியம் என்று கூறியுள்ளனர். அதாவது தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது