
பொதுவாகவே பாப்பு புற்றுக்குள் பால் ஊற்றுவதும் முட்டை வைப்பதையும் பலரும் பார்த்திருப்போம். இந்து சாஸ்திரத்தை பொருத்தவரை பாம்புகள் கடவுளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் காலம் காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை ஏன் வைக்கப்படுகிறது என தெரியுமா? உண்மையிலேயே பாம்புகள் விஞ்ஞான ரீதியாக பார்த்தால் முட்டையையும் பாலையும் குடிக்காது. பின்னர் எதற்காக புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதி காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தது. அதாவது மனிதர்களை விட பாம்புகள் தான் அதிகமாக இருந்தன. ஆனால் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஒரு உயிரை கொள்ளும் உரிமை இல்லை. எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என முயற்சித்ததால் அதன் விளைவாக தோன்றியதுதான் இந்த பழக்கம். அதாவது அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம்.
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடிச் செல்லும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் மற்றும் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கின்றது. எனவே இதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. பாம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது என்பது தான் அறிவியல் உண்மை.