தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். 1991 கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடித்த திறமையால் வைகை புயல் என்ற பட்டப் பெயரையும் பெற்றார். இந்நிலையில் நகைசுவை நடிகை ஆர்த்தி பேட்டி ஒன்றில், எப்படி இளையராஜா துன்பத்திலும், இன்பத்திலும் தேவைப்படுகிறாரோ அதுபோல வடிவேல் நகைச்சுவையும் கட்டாயம் தேவை. நன்றாக நடித்தால் நம்மிடம் அங்கே சூப்பர் செல்லம் நன்றாக நடித்து விட்டாய் என்று சொல்வார்.

ஆனால் படத்தில் அந்த காட்சி இருக்காது. இது குறித்து ஏன் என்று கேட்டால் அது நல்லா இல்ல செல்லம் அடுத்த படத்தில் செய்து விடுவோம் என்று கூறுவார். மேலும் ஆர்த்தி கணவர் கூறுகையில், வடிவேலு அவரை நம்பி இருப்பவர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவார். அதில் அவரது மனதிற்கு பிடித்தது போல் யார் வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்.

ஒரு படத்தில் கமிட்டான கோவை சரளாவே மக்கள் அடிக்கடி பார்த்து விட்டார்கள். அதனால் அவர்களுக்கு பதிலாக புதிதாக யாரையாவது போடலாம் என்று சொல்லினார். இறுதியில் அந்த படமே நின்று விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களில் ஒரு முகத்தை யாருமே பார்க்க முடியவில்லை. பாம்பின் குணம் கொத்துவது தானே என்று கூறியிருக்கிறார்.