விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. அங்கு 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சிலையை நேற்று நள்ளிரவு காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர். அலுவலக முன்பு பாரதமாதா சிலை வைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பாஜகவினர் வைத்திருந்த பாரதமாதா சிலை அகற்றப்பட்டு வருவாய் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.