அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என் சிந்தனைக்கு இந்த தேர்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது என்று பாஜகவில் இணைந்தது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயகம் குறைந்து பணநாயகம்  மேலோங்கிய அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. இது என் முடிவல்ல, ஒரு வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.