கடந்து சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். Ex அமைச்சர் கே சி கருப்பணன் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவை வலுப்படுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டுவர இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.