கலைஞர் தொடர்பான 40 ஆயிரம் கேள்விகள் கேட்டு வினாடிவினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதலைமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது,  பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும். உண்மை வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். தமிழகத்தில் பல கோடி பேருக்கு Life கொடுத்ததால் தான் கலைஞர் இன்னும் Liveஆக இருக்கிறார்.

அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக இருந்தார் கருணாநிதி. பாசத்தில் கனிமொழியாகவும், தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசும் போது கர்ஜனை மொழியாக இருக்கிறார், தங்கை கனிமொழி. கலைஞர் 100 வினாடிவினா போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. உண்மை வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழ் சமுதாயம் கொண்டாடும். இந்த உலகம் வாட்ஸ்அப் உலகம் என பேசியுள்ளார்.