மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் செல்போன் மூலமாகவும் பேசி தங்கள் காதலை வளர்த்த நிலையில் நக்மா பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவருடைய விசா நிராகரிக்கப்பட்டது.

இதனால் தன்னுடைய பெயரை சனம் கான் ரூக் ‌ என்று ஆதாரில் மாற்றியுள்ளார். இந்த பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் தன் காதலனை ஆன்லைன் மூலமாக திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் போலியான ஆவணங்கள் தயாரித்து சனம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி ‌ இந்தியா திரும்பினார். அப்போது போலியான ஆவணங்கள் மூலம் அவர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகிறார்கள். மேலும் நக்மாவின் பெற்றோர் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய மகள் பெயரை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.