திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேற்று சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர். பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக் கோவிலுக்கு செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.