தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று ஆசை தான். அதற்கான நிதி வரும்போது முதல்வர் நடவடிக்கையை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களின் கல்வித்தரம் குறையாமல் இருப்பதற்காக அரசு பள்ளியின் ஆய்வகங்கள் நவீன வசதியுடன் மாற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.