தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகும். இந்நிலையில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சிறுவர், சிறுமியர் நலன் கருதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.