நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அப்போது, தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் திருவாரூர் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் மதுசூதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரின் தூண்டுதலின் பேரில், மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 4 பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.