தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு அரசியல் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கே விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.