தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவை போன்ற தமிழக பள்ளிகளிலும் குடிநீர் குடிக்க தனி இடைவேளை விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், கோடை வெயிலின் தாக்கம் என்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளியின் போதும் வாட்டர் பில் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளார். மேலும் இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்று வருகிறது.