மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திர பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்துச் செல்லலாம் எனவும் ஆனால் வகுப்பறைகளில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்ட உள்ளது. மேலும் வகுப்பறைக்கு செல்லும் முன்பு ஆசிரியர்கள் தங்களது செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.