திருப்பதி மாவட்டத்தில்  ஒரு குறிப்பிட்ட கிராம பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பள்ளி மாணவிகள் மினி லாரியில் மிகவும் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள குக்கிராமங்களிலிருந்து நகரப் பகுதிகளுக்குச் செல்ல போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவிகள், அவ்வழியே வரும் சரக்கு வாகனங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

“>

 

மினி லாரியின் பின்பக்கத் தடுப்புச் சட்டங்களைப் பிடித்துக்கொண்டு மாணவிகள் கூட்டமாகத் தொங்கியபடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நேரிடும் அபாயம் இருப்பதை அறிந்தும் வேறு வழியின்றி இத்தகைய பயணத்தை மேற்கொள்வதாகக் கூறும் அப்பகுதி மக்கள், மாணவிகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும் எனத் தமிழக மற்றும் ஆந்திர அரசு அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.