
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 6-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் பள்ளியில் பள்ளிகளை ஜூன் 12-ம் தேதிக்கு திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.