மத்திய அரசானது பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மாண்வர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியலின சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்  இதற்காக ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப்  வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.