பிரபல நடிகர் நீல் நிதின். இவர் தமிழ் சினிமாவில் வெளியான கத்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் பட சூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்ற நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை பார்த்து அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அதாவது அவர் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லாததால் சந்தேகப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக விசாரணை நடத்திய நிலையில் அவருடைய குடும்பம் பற்றி கூகுளில் தேடியுள்ளனர். அதன் பிறகு தான் உண்மையை அறிந்து கொண்டு அவரை விடுவித்துள்ளனர். மேலும் இது பற்றி நடிகர் நிதின் கூறும்போது நான் ஒரு இந்தியர் என்று கூறும் போது என்னை இந்தியர் என்ற ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என்று கூறியுள்ளார்.